Sat. Apr 20th, 2024

சேவைக்கு திரும்பிய 4299 முப்படையினர்!!

சட்டரீதியற்ற வகையில் பணியில் இருந்து வெளியேறிய நான்காயிரத்து 299 முப்படையினர் பொது மன்னிப்பு காலப்பகுதியில் மீண்டும் சேவைக்கு இணைந்துள்ளனர்.

சேவைக்க திரும்பாமல் இருக்கின்ற முப்படையினர் சட்டரீதியாக தமது சேவையிலிருந்து விலகுவதற்கு அல்லது மீண்டும் சேவையில் இணைந்து கொள்வதற்கு பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த 5 ஆம் திகதி முதல் எதிர்வரும் 12 ஆம் வரை பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 72 சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 30 திகதிக்கு முன்னர் தமது சேவையிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக விலகியுள்ள முப்படையினருக்கு இந்த பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்