Tue. May 7th, 2024

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியா

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனவரி 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் ஆவணத்தில் இன்று பிரித்தானிய பிரதமர் கையெழுத்திட்டுள்ளார். இதற்கு முதல் இன்று காலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டிருந்தார். இந்த நிலையில் இந்த ஆவணம் யூரோ ஸ்டார் புகையிரதம் மூலம் லண்டனை மழையில் வந்தடைந்த நிலையில் , பிரித்தானிய பிரதமர் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம் கடந்த மூன்று வருடங்களாக இருந்த இழுபறிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதுடன் , பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக பிரதமரால் சமர்பிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இந்த ஆவணம் தொடர்பாக சம்பிரதாய வாக்கெடுப்பு நிகழவிருக்கிறது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்