உலக சாதனைக்காக இரத்ததான முகாம். நல்லூர் ரோட்டரியால் யாழில் ஏற்பாடு
உலக சாதனை நிகழ்த்தும் முகமாக உலகளாவிய ரீதியில் சுமார் 1000 இரத்ததான முகாம்களை நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக நல்லூர் ரோட்டரி கழகத்தினால் இரத்ததான முகாம் மேற்கொள்ளப்பட்டது.
திருவண்ணாமலை அகில் பார்தியா அமைப்புடன் இணைந்து நல்லூர் றோட்டறிக் கழகத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நேற்று இவ் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
இதில் பலர் தானாக முன்வந்து இரத்ததானம் செய்து ஒத்துழைப்பு வழங்கினர்.
இந்த நிகழ்வில் இரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதலும் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் நல்லூர் ரோட்டரி கழக தலைவர் ரோட்டரியன் தங்கராஜா றவினதாஸ் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்