உடுப்பிட்டி பண்டகை பிள்ளையார் ஆலய தொடர்பு பலர் சுயதனிமைப்படுத்தலில் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்
உடுப்பிட்டி பண்டகைப்பிள்ளையார் ஆலயத்தினர் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டமையால் ஆலயநிர்வாகத்தினர், பூசகர் அனைவரும் தனிமைம்படுத்தப்பட்டுள்ளதோடு வழக்கு தாக்கல் பதிவு செய்யவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் தேர்த்திருவிழா நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் பலர் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளிகளைப் பேணாமலும், அதிகளவான எண்ணிகை கொண்டோர் ஒன்று கூடி நிகழ்வை நடாத்தியமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆலய நிர்வாகத்தினர், மற்றும் குருக்கள் ஆகியோர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதோடு விழாவில்
கலந்துகொண்ட பக்தர்கள் PCR பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளனர். அத்துடன் தனிமைப்படுத்தல் காலம் நிறைவு பெற்றதும் ஆலய நிர்வாகத்திற்கெதிராக சுகாதார விதிமுறைகளுக்கு முரணாக செயற்பட்டமைக்காக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.