இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்களுக்கான கலந்துரையாடல் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு வடமாகாண கல்வித் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இக் கலந்துரையாடல் வடமராட்சி, யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மராட்சி, தீவகம் மற்றும் கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கே நடைபெறவுள்ளது.