Wed. May 1st, 2024

ஈரானிய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

சவூதி அரேபியாவின் ஜெடா துறைமுகத்திற்கு அருகே ஈரானிய எண்ணெய் கப்பல் இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களில் சிக்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்பல் வெடித்ததால் கச்சா எண்ணெய் கடலில் கசிந்தது என்று ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெடா துறைமுகத்திலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் பயணித்தபோது கப்பல் தாக்கப்பட்டது.

அப்பகுதியில் இயங்கும் அமெரிக்க கடற்படை, கப்பல் தாக்கப்பட்டதை தெரிவித்துள்ளது.ஆனால் மேலதிக தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

இந்த தாக்குதல் ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே பதட்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்