Fri. Apr 26th, 2024

“இலவச கண்புரை (cataract) சத்திரசிகிச்சை”

“இலவச கண்புரை (cataract) சத்திரசிகிச்சை” யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை (cataract) சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் நன்கொடையாளர்களின் உதவியடன் இலவசமாக கண் சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நோயாளர்களைத் தெரிவுசெய்யும் கண்பரிசோதனை முகாம்கள் பின்தங்கிய பிரதேசங்களில்; ஒழுங்குபடுத்தப்படவுள்ளன. இதன்பிரகாரம் நாளை மறுதினம் 04.03.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் முதலாவது கண்பரிசோதனை முகாம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை, காரைநகர் பிரதேச வைத்தியசாலை மற்றும் முள்ளியான் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள நோயாளர்கள் மேற்படி கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்