Sat. Apr 27th, 2024

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக – சிவஞானம் சிறீதரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுக்குழு கூட்டத்திலேயே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சீ.யோகேஷ்வரன் போட்டியில் இருந்து விலக, சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தலைமை பதவிக்காக  போட்டியிட்டனர். கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்
சிவஞானம் சிறீதரன் 187வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எம்.ஏ.சுமந்திரன் 134 வாக்குகளையும் பெற்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்