Sat. May 4th, 2024

இரு பிரிவுகளில் சம்பியனாகியது அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம்

 

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத் தொடரில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் 16, 18 வயது இரு பிரிவுகளிலும் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர்.
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத் தொடர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
16 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான வலைப்பந்தாட்டத்தின் இறுதியாட்டத்தில்  அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணியை எதிர்த்து உடுவில் மகளிர் கல்லூரி அணி மோதியது. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இருப்பினும் ஆட்ட நேர முடிவில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி 10:09 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர். 3ம் இடத்தை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி பெற்றது.
18 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான இறுதியாட்டத்தில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதியது. இதில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி 26:21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர். 3ம் இடத்தை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்