இமையாணன் வெள்ளரோட்டில் அமைந்துள்ள வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்
22.08.2020 சனிக்கிழமை இரவு இமையாணன் வெள்ளரோட்டில் அமைந்துள்ள வீட்டின் மீது இனம்தெரியாத கும்பல் ஒன்று வீட்டில் உள்ளவர்கள் உறங்க சென்றபின்பு பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளது. வீட்டின் ஜன்னல்கள் கதவுகள் கதிரைகள் போன்ற பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. வீட்டிலுள்ளவர்கள் எவ்வித காயமும் இன்று தப்பிவிட்டார்கள். வீட்டுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்கள். மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்