Mon. May 6th, 2024

ஆழியவளையில் மர்ம பொருள்!! -ரி.ஜ.டி விசாரணை ஆரம்பம்-

வடமராட்சி ஆழியாவளை கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட 15 கிலோ நிறையுடைய பொதி தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பொதியில் உள்ள பொருட்களின் பகுதிகள் இன்றைய தினம் அரச பகுப்பாய்வுக்கு அனுப்பபடவுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய, கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டனர்.

இதன்போது சந்தேகத்துக்குகிடமான பொதி மீட்கப்பட்டுள்ளது.

அந்த பொதி யாரால் மறைத்து வைக்கப்பட்டது என்பது தொர்பில் உரிய தகவல்கள் எவையும் கிடைக்க பெறவில்லை.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்