Thu. May 9th, 2024

ஆதிகோயிலடியில் 26 பேர் உட்பட யாழ் மாவட்டத்தில் 104 பேருக்கு தொற்று

வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் 26 பேர் உட்பட யாழ் மாவட்டத்தில் நேற்று 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை வெளியான முடிவுகளின் அடிப்படையில் வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியைச் சேர்ந்த பருத்தித்துறை சுகாதார பிரிவில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் முடக்கப்பட்ட பகுதியில் இருந்து வீட்டிற்கு கட்டாயமாக ஒருவருக்கும்,  ஒருவருக்கு தொற்று இருக்குமாயின் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் என 166 பேருக்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்றுள்ளான அனைவரையும் நாளை கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பகவுள்ளனர். அத்துடன் சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் 22 பேருக்கும்,  உடுவில் சுகாதார பிரிவில் 13 பேருக்கும், நல்லூர் சுகாதார பிரிவில் 10 பேருக்கும்,  கோப்பாய் சுகாதார பிரிவில் 12 பேருக்கும்,  வேலணை சுகாதார பிரிவில் 12 பேருக்கும்,  ஊர்காவற்துறை சுகாதார பிரிவில் 6 பேருக்கும்,  தெல்லிப்பளை சுகாதார பிரிவில் இருவருக்கும்,  மருதங்கேணி சுகாதார பிரிவில் ஒருவருக்கும் என யாழ் மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்