Sun. Apr 28th, 2024

அனித்தாவின் சாதனையை முறியடித்து டக்சிதா புதிய சாதனை

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட 20 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான கோலூன்றி பாய்தலில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த நே.டக்சிதா புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான கோலூன்றி பாய்தலில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த நே.டக்சிதா 3.35 மீற்ரர் பாய்ந்து புதிய சாதனைப் பதிவு செய்துள்ளதுடன் தங்கப் பதக்கத்தையும் அதே,  கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த வி.விசோபிகா 3.10 மீற்ரர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர். 2014ம் ஆண்டு தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.அனித்தாவினால் 3.23 மீற்ரர் பாய்ந்த உயரத்தை சாவகச்சேரி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த நே.டக்சிதா 3.35 மீற்ரர் பாய்ந்து புதிய சாதனையைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்