Fri. Apr 26th, 2024

திரைப்பட பாணியில் அச்சுவேலியில் வாள் வெட்டு

திரைப்பட பாணியில் மக்கள் கூட்டம் நிறைந்த வீதியில் இளைஞர் ஒருவரை மோட்டார் சையிக்கிளில் வந்த இளைஞர்கள் வாளால் வெட்டி தப்பியோடியதில் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அச்சுவேலி சந்தியில் இருந்து தொண்டமானாறுக்கு செல்லும் வீதியில் வைர கோயிலடிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அச்சுவேலி பாரதி வீதி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் சுபத்திரன் (வயது 28 ) என்ற இளைஞரே வெட்டுக் காயங்களுக்குட்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை அச்சுவேலி கொமேர்சல் வங்கியில் இருந்து பணமெடுத்து மோட்டார் சையிக்கிளில் புறப்பட்ட போது பின் தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் அச்சுவேலி சந்திக்கு அருகாமையில் உள்ள வைரவர் கோயிலடிக்கு முன்பாக  வெட்டுக் காயங்களை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை பொதுமக்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்