‘மன்னார் பிரிமீயர் லீக்’ தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த உதைபந்தாட்ட போட்டியானது அயலன்ட் எப்.சி உதைபந்தாட்ட அணிக்கும் பிரதர் ஸ்ரனி ஐக்கிய உதைபந்தாட்ட அணிக்கும் இடையில் போட்டி இடம் பெற்றது.
-இதன் போது போட்டி ஆரம்பமாகி 47 ஆவது நிமிடத்தில் அயலன்ட் எப்.சி உதைபந்தாட்ட வீரர் எஸ்.றொக்ஸன் முதலாவது கோலையும்,72 ஆவது நிமிடத்தில் ஜே.தாசன் ஒரு கோலையும்,80 ஆவது நிமிடத்தில் எஸ்.ஜெயபாலன் ஒரு கோலையும் அடித்தார்.
-அயலன்ட் எப்.சி வீரர்கள் 3 கோல்களை அடித்தனர். பிரதர் ஸ்ரனி ஐக்கிய உதைபந்தாட்ட அணி எவ்வித கோலையும் அடிக்கவில்லை.இதனால் அயலன்ட் எப்.சி 3:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
-இதே வேளை கடந்த வியாழக்கிழமை இரவு 5 ஆம் நாள் சுற்று இடம் பெற்றது.
மன்னார் லயன்ஸ் உதை பந்தாட்ட கழகத்திற்கும், ஈடன் உதைபந்தாட்ட கழகத்திற்கும் இடம் பெற்றது.
முதலில் போட்டி ஆரம்பமாகி 4, 49 ஆவது நிமிடங்களில் மன்னார் லயன்ஸ் உதை பந்தாட்ட கழக வீரர், ஏ.பி.சி.ஏ.றோச் 2 கோல்களையும், 10 ஆவது நிமிடத்தில் ரி.ராஜ் கமல் மேலும் ஒரு கோலையும்,40 ஆவது நிமிடத்தில் ஏ.ஜே.மாக்கஸ் ஒரு கோலையும், 53 ஆவது நிமிடத்தில் பி.றோட்னி ஒரு கோலையும் அடித்தனர்.
மன்னார் லயன்ஸ் உதை பந்தாட்ட கழகம் 5 கோல்களை போட்டுள்ளனர்.
அதே நேரம் ஈடன் உதைபந்தாட்ட கழக வீரரான ஏ.லக்ஸன் 85 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.
-இந்த நிலையில் மன்னார் லயன்ஸ் உதைபந்தாட்ட கழகம் 5:1 என்ற கணக்கில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.