Fri. May 3rd, 2024

கொழும்பு பெண்ணின் அந்தரங்க படங்களை வெளியீடுவதாக மிரட்டிய லண்டனில் வசிக்கும் யாழ் இளைஞன்

சமூக ஊடகம் மூலம் கொழும்பு சிலேவ் ஐலேண்ட் பகுதியில் வசிக்கும் 33 வயது பெண்ணிடம் தொடர்பில் இருந்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட லண்டனில் வசிக்கும் இளைஞர் ஒருவர் பெண்ணின் அந்தரங்க படங்களை வெளியிட போவதாக மிரட்டி 17 லட்ஷம் ரூபா பணம் கோரியுள்ளார்.

இவர்களின் உறவு முறிந்த  நிலையில் குறித்த பெண் அனுப்பிய அந்தரங்க படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட போவதாக மிரட்டிய குறித்த தமிழ் இளைஞர், இதற்காக பெரும் தொகை பணத்தை கோரியுள்ளார்.

இந்த நிலையில் 7 லட்ஷம் பணத்தை தருவதற்கு ஒப்புக்கொண்ட பெண், பொலிஸாரிடம் முறையிட்டதை தொடர்ந்து, குறித்த இளைஞரால் பணம் பெறுவதற்கு அனுப்பப்பட்ட  இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்