Wed. May 8th, 2024

பளுதூக்கலில் மயிலிட்டி கலைமகள் வி. மாணவன் சுஜீபன் தங்கம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்ற ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் யா/மயிலிட்டி கலைமகள் வித்தியாலய மாணவன் எஸ்.சுஜீபன்  தங்கப் பதக்கத்தை  கைப்பற்றினார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டிகள் கடந்த சனிக்கிழமை பொலநறுவை றோயல் கல்லூரியில் இடம்பெற்றது.
17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.சுஜீபன்
102 கிலோ எடை பிரிவில் 128 கிலோ பளுவை  தூக்கி தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்