Thu. Apr 25th, 2024

பளுதூக்கலில் ஏழாலை சிறீ முருகன் வித்தியாலய மாணவி தனுசியா தங்கம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்ற பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் ஏழாலை சிறீ முருகன் வித்தியாலய மாணவி எஸ்.தனுயா தங்கப் பதக்கத்தை  கைப்பற்றினார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டிகள் கடந்த சனிக்கிழமை பொலநறுவை றோயல் கல்லூரியில் இடம்பெற்றது.
20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் ஏழாலை சிறீ முருகன் வித்தியாலய மாணவி எஸ்.தனுயா
64 கிலோ எடை பிரிவில் 120 கிலோ பளுவை  தூக்கி தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்