Thu. May 2nd, 2024

நெல்லியடி கொமேர்சல் வங்கியில் ஏரிஎம் இல் பணம் பெறுவதில் சிரமம்

நெல்லியடி கொமேர்சல் வங்கியில் ஏரிஎம் அட்டையூடாக பணத்தை பெறுவதில் பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். பணம் பெறுவதற்கு 2 இயந்திரங்களும், பணம் அனுப்புவதற்கு ஒரு இயந்திரம் உள்ள போதிலும் இதில் ஒரு இயந்திரம் தொடர்ச்சியாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பலர் நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அத்துடன் தற்போது வங்களின் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளதுடன், விடுமுறை தினங்களில் இவ்வாறான நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பாக வங்கி முகாமையாளர் கவனமெடுக்க வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்