யாழ் போதனா வைத்தியசாலையில் அலைபேசிகளை திருடியவர் கைது
யாழ் போதனா வைத்தியசாலையில் அலைபேசிகளைத் திருடிவந்த இளைஞர் ஒருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞர் மானிப்பாய் நாவற்கட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர் யாழ் போதனா வைத்தியசாலையின் நோயாளர்கள் மற்றும் ஊழியர்கள் போனை சார்ஜ் போடும் போதோ அல்லது மலசல கூடங்களுக்குச் செல்லும் போதோ அவதானித்து அவர்களின் தொலைபேசிகளைத் திருடியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.