பூநகரி உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுமதியுடன் பூநகரி மத்தி நண்பர்கள் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உழவர் கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இன்று கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து புங்குடுதீவு சண்ஸ்ரார் அணி மோதியது. இதில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர்களான சுஜாஸ்கான் 2 கோல்களையும், ஆர்த்திகன், சந்தோஸ் ஆகியோர் ஒவ்வொரு கோல்களையும் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.