கரவெட்டியில் பட்டப் பகலில் களவு
கரவெட்டி கிழவி தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் 10 நகை களவாடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று மதியம் நடைபெற்றுள்ளது.
கரவெட்டி கிழவி தோட்டம் பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் கோவிலுக்கு சென்ற வேளை இக்களவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டுக்காரர்கள் கோயிலுக்கு சென்று திரும்பி வந்து கதவை திறந்து பார்த்த போது, வீட்டின் கூரை பிரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வீட்டில் வைக்கப்பட்ட பொருட்களை பார்த்த போது 10 பவுன் நகை களவாடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.