Wed. May 8th, 2024

வவுனியா விபத்தில் சிறுவன் பலி

வவுனியா செட்டிகுளம் பகுதியில் நடைபெற்ற விபத்தில் 15 வயதுச் சிறுவன் பலியாகியுள்ளார்.

இவ் விபத்து நேற்று வவுனியா செட்டிகுளம் பகுதியில் நடைபெற்றது.

செட்டிகுளம் முகத்தான் பகுதியைச் சேர்ந்த ஆ.சயந்தன் (வயது 15) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மதவாச்சி – மன்னார் வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் செட்டிகுளம் முகத்தான் பகுதி பிரயாணம் செய்த போது மோட்டார் சையிக்கிளுடன் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சையிக்கிளில் பயணித்த சிறுவன் பலியாகியுள்ளார்.

டிப்பர் சாரதியை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்