வவுனியா விபத்தில் சிறுவன் பலி
வவுனியா செட்டிகுளம் பகுதியில் நடைபெற்ற விபத்தில் 15 வயதுச் சிறுவன் பலியாகியுள்ளார்.
இவ் விபத்து நேற்று வவுனியா செட்டிகுளம் பகுதியில் நடைபெற்றது.
செட்டிகுளம் முகத்தான் பகுதியைச் சேர்ந்த ஆ.சயந்தன் (வயது 15) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மதவாச்சி – மன்னார் வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் செட்டிகுளம் முகத்தான் பகுதி பிரயாணம் செய்த போது மோட்டார் சையிக்கிளுடன் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சையிக்கிளில் பயணித்த சிறுவன் பலியாகியுள்ளார்.
டிப்பர் சாரதியை பொலீஸார் கைது செய்துள்ளனர்.