இந்தியாவுக்கு திருகோணமலை நபருடன் சென்ற படகுடன் பருத்தித்துறை கடலில் 2 பேர் கைது
10.12.2020. இன்று விடியற்காலை வியாழக்கிழமை பருத்தித்துறை கடற்பரப்பில் இருந்து இந்தியாவுக்கு திருகோணமலையைச் சேர்ந்த ஒருவரை கொண்டு செல்லும்போது இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். பருத்தித்துறையை சேர்ந்த படகோட்டி வயது 47 மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த இளைஞன் வயது 37 இருவரும் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். தற்பொழுது விசாரணையின் பின் பருத்தித்துறை நீதிமன்றத்தின் முன் நிலைப்படுத்தப்பட்ட உள்ளார்கள்.