58வது நாள் போராட்டம் இயக்கச்சியில்
வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் எனக் கோரிய 100 நாள் போராட்டம் நடைபெற்று வருகின்றன. குறித்த போராட்டம் மன்னர் மாவட்டத்தில் ஆரம்பமாகி 58ஆவது நாளான நேற்று கிளிநொச்சி மாவட்ட பளை பிரதேச இயக்கச்சியில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு மக்களுக்கு கெளரவமான தீர்வு வேண்டும் என வலியுறுத்தி குறித்த அமைதி போராட்டம் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினர் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் மக்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது