23 -இரவு 25 காலை 4 மணி வரை பயணத் தடை அமுலில்
ஜூன் 23ஆம் திகதி இரவு 10:00 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 04:00 மணி வரை, முன்னரைப் போன்று மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04:00 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட மாட்டாது. மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், தொடர்ந்தும் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படும்.
அரச மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள், மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்டு பணிகளைத் தொடர, நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், குறைந்தளவான நபர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என
கொவிட் ஒழிப்புக்கான சிறப்பு செயலணி ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடிய போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.