Thu. Apr 25th, 2024

கிளிநொச்சியில் பொருத்தமான மணல் அகழ்வுக்கு அனுமதி

மணல் அகழ்வதற்கான அனுமதிகளை பொருத்தமான வகையில்  வழங்குவதன் மூலம் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று  விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கு பொருத்தமான இடங்களை தெரிவு செய்து, தேவையானளவு அனுமதிகளை விரும்புகின்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக
ஒரு வார காலப் பகுதிக்குள் குறித்த அனுமதிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்