Sat. May 4th, 2024

1050 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 5 பேர் கைது!

தலை மன்னார் கடல் பகுதியில் கடற்படையினரினால் நடந்த விடே சோதனை நடவடிக்கையின் போது 1050 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வட மத்திய கடற்படை கட்டளை தலை மன்னார் தெக்கு கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமான இரண்டு டிங்கி படகுகளை கண்காணித்துள்ளது.

குறித்த படகுகளை மேலும் சோதிக்கும் போது அங்கிரிந்து 30 பார்சல் பி.டி இலைகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், 19 முதல் 44 வயதுக்குட்பட்ட மன்னார் தால்பாடு பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள், டிங்கி படகுகள் மற்றும் பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்