Sat. May 4th, 2024

ஸ்ரீரங்காவை கைது செய்ய உத்தரவு!! -வவுனியா நீதிமன்றில் முன்னிலையாக்க அறிவுறுத்தல்-

முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2011ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதிஸ்ரீரங்கா உள்ளிட்ட சிலர் மன்னார் நோக்கிப் பயணித்த வேளையில் செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரிரங்காவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீரங்காவுடன், ஓய்வு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட மேலும் ஐந்து பேரை வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்