யாழ்.இந்துவின் அதிபராக செந்தில்மாறன் பொறுப்பேற்பு!!
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பாடசாலையின் பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன் தனது கடமைகளை இன்று புதன் கிழமை முற்பகல் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் அலுவலகத்தில் பாடசாலை சமூகத்தின் வரவேற்பையடுத்து அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.