Thu. May 2nd, 2024

வெடிபொருட்கள் மீட்பு!! -இருவர் கைது-

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் வெடிபொருட்கள் சிலவற்றை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது காயான்கேணியில் உள்ள கைவிடப்பட்ட காணியிலிருந்து புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட 5 மிதி வெடிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதேவேளை வியாழக்கிழமையன்று (6.2.2020) மாலை ஓட்டமாவடி பிரதேசத்தில் வெடிபொருட்கள் சிலவற்றினை கைப்பற்றியதுடன் 2 சந்தேக நபர்களையும் கைது செய்திருந்தனர்.

ஜெலக்ரிக்ஸ் குச்சிகள்-47,சேப்ரி கோட் வயர் 36அடி,நொன் இலக்ரிக்ஸ் பொருட்கள் 69 என்பன கைப்பற்றப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வாழைச்சேனை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்