Fri. Apr 26th, 2024

வவுனியாவில் மர்மப் பொதியால் 20 நிமிடங்கள் வீதி தடை

வவுனியா பகுதியில் மர்மப் பொதியால் வவுனியா – கண்டி வீதி சுமார் 20 நிமிடங்கள் மூடப்பட்டது.

இன்று வவுனியா பகுதியில் கெப்பக்கடுவ சிலைக்கு முன்பாக இனப்படுகொலைக்கு நீதி வேண்டி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் முடிவடைந்து சில நிமிடங்களில் சிலைக்கு முன்பாக இராணுவச் சீருடையில் மடிக்கப்பட்ட நிலையில் மர்மப் பொதி கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குண்டு செயலிழக்கும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றநிலை தோன்றியது.  இதனையடுத்து மர்மப் பொதியை சோதித்தவிடத்து அப்பொதியில் ஆலயத் துண்டுகள், அதிஸ்ட்லாபச் சீட்டு என்பனவே அதில் கிடந்துள்ளது. இதனை இராணுவத்தினரால் பொலீஸாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்