Tue. May 7th, 2024

வல்விபுரக் கோயில் திருவிழாவிற்கு குறுகிய சேவை நடைபெறாது

வரலாற்று சிறப்பு மிக்க வல்விபுரக் கோயிலுக்கான குறுகிய போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சிற்றூர்தி சங்கத் தலைவர் துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.
வல்விபுர ஆழ்வார் கோயில் இன்று  புதன்கிழமை   கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 30ம் திகதி தேர் திருவிழாவும்,  மறுநாள் தீர்தோற்சவமும் நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கு குறுகிய போக்குவரத்து சேவைகள் நடைபெறாது பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் போக்குவரத்து அல்லது யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறைக்கு வரும் போக்குவரத்து வல்விபுரக் கோயிலுக்கு சென்று வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு பயணிகளின் சனநெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காகவும் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்