Sat. May 4th, 2024

வரணி வடக்கில் கோயிலில் திருட்டு

தென்மராட்சி வரணி வடக்கில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் திருட்டு ஒன்று நடைபெற்றுள்ளது. நேற்று அதிகாலை வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான் பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளது. ஆலயத்துக்குள் புகுந்த திருடர்கள் பிள்ளையாரின் சங்கிலி,  40 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஐம் பொன்னாலான கலசம் உட்பட பல பெறுமதியான பொருட்களை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். இதில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட பழமையான பொருட்கள் திருடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இச்சம்பவம் காமெராமூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்