வட இந்தியாவில் கன மழை!! -100 பேல் பலி-
இந்திய பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்யும் கனமழை காரணமாக அங்கு பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 29 பேர் பலியானதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் மழை தொடர்பான விபத்துக்களில் 110 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் மாத்திரம் 93 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.