வடமராட்சி கிழக்கில் ப.நோ.கூ.சங்க கடை திறப்பு
வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தால் சிறிய கூட்டுறவு நகர் கடை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் தங்கவேல் தங்கரூபன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி அணையாளர் மு.சந்திரசேகர்,
கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சண்குகநாதன், முன்னாள் தலைவர்களான சி.திரவியநாதன், பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.