Thu. Apr 25th, 2024

தொண்டைமானாறு ஆற்றில் முதியவரின் சடலம் மீட்பு

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய ஆற்றில் முதியவர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வேலாயுதம்பிள்ளை நவரத்தினம் (வயது 85) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காலை ஆலய தரிசனத்திற்காக சென்று ஆற்றில் நீராடிய போதே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்