Sat. Apr 27th, 2024

வடமராட்சி கல்வி வலய அதிபர்களும் போராட்டத்திற்கு ஆதரவு

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் நாளையும்,  நாளை மறுதினமும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள அதிபர்,  ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி தொழிற்சங்கங்களால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக கரவெட்டி கோட்ட மற்றும் பருத்தித்துறை கோட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் தமது ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.
அரசாங்கத்தினால் முதலாம் கட்டமாக 21ம், 22ம் திகதிகளில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்