Fri. Apr 26th, 2024

சட்டவிரோத மணல் அகழ்வு- சுமந்திரன் அவர்கள் பார்வையிட்டார்

பருத்தித்துறை பகுதியில் தனியார் காணிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களை பாராளுமன்ற உறுப்பினர் எம் சுமந்திரன் பார்வையிட்டார்.

பருத்தித்துறை உபயகதிர்காமம், வல்லிபுரக் குறிச்சி மூச்சயம்பலம் கோயிலுக்கு அருகாமையில் உள்ள தனியார் காணிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அப்பகுதியில் இன்று புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக பலமுறை பொலீஸாருக்கு தெரியப்படுத்திய போதிலும் கட்டுப்படுத்தவில்லை என அப்பகுதி மக்களால்பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து நேரடியாக சென்று பார்வையிட்டதுடன், குறித்த பொலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்