வடமராட்சியில் சுடரேற்றி நினைவேந்தல்
வடமராட்சியில் முதல் மாவீரர் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன் சங்கர் அவர்களுடைய இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான க.சதீஸ் உள்ளிட்டோர் மாவீரன் லெப் சங்கர் இல்லத்தில் ஈகை சுடரேற்றிஅகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.