வடமராட்சியில் கோர விபத்து பெண் படுகாயம்
குஞ்சர்கடை மண்டான் வீதியில் விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் சற்று முன்னர் வடமராட்சி குஞ்சர்கடையிலிருந்து மண்டான் வீதிக்கு செல்லும் இடத்தில் மோட்டார் சையிக்கிள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் சற்று முன்னர் விபத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
மேலதிக சிகிச்சை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவத்தில் புச்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த பெண் என முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விபரம் இன்னும் பதிவாகவில்லை.