வடமராட்சியில் களவு, ஹெரோயின், கஞ்சா பாவனையாளர்கள் 11 பேர் கைது
நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் களவு, கஞ்சா, ஹெரோயின் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்ட 11 பேரை நேற்று முன்தினம் சனிக்கிழமை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.
நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை மற்றும் ராஜகிராம பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய கரவெட்டி இராஜகிராம பகுதியைச் சேர்ந்த இருவரும், ஹெரோயின் மற்றும் கஞ்சா பாவனையில் ஈடுபட்ட துன்னாலை பகுதியைச் சேர்ந்த 9 பேருமாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.