Sun. May 12th, 2024

றேஞ் லயன்ஸ்,  றேஞ் கிங்ஸ் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் தமது அங்கத்தினர்களிடையே நடாத்தும் றேஞ்சஸ் பிரிமியர் லீக் உதைபந்தாட்ட போட்டியில் றேஞ் லயன்ஸ்,  றேஞ் கிங்ஸ் அணிகள் அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
நேற்று குறித்த கழக மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்த்திகன் தலைமையிலான றேஞ் லயன்ஸ் அணியை எதிர்த்து  எதிர் மதுசாந் தலைமையிலான றேஞ் பிற்றேர்ஸ் அணி மோதியது. இதில் அணித் தலைவர் ஆர்த்திகனின் இரு கோல்களினால் 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது றேஞ் லயன்ஸ் அணி. இதில் ஆட்ட நாயகனாக றேஞ் லயன்ஸ் அணி வீரர் விஜீபன் தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்து நடைபெற்ற ஆட்டத்தில்
லக்சிகன் தலைமையிலான றேஞ் கிங்ஸ் அணியை எதிர்த்து  சௌமியன் தலைமை யிலான றேஞ் ஸ்ரார் அணி மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் போடாமலேயை நிறைவடைந்தது.
இரண்டாவது பாதியாட்டம் ஆரம்பமாகியதும் இரு அணிகளும் புதிய உத்வேகத்துடன் விளையாடினர்.  ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் றேஞ் கிங்ஸ் அணி வீரர் கைலாஸ் ஒரு  கோலினை போட்டு தமது அணியை 1:0 கோல் கணக்கில் றேஞ் கிங்ஸ் அணி  வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.  இதில் ஆட்ட நாயகனாக றேஞ் கிங்ஸ் அணி வீரர் தீபன் தெரிவு செய்யப்பட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்