யுத்தத்தில் இராணுவ தளபதிகள், சிப்பாய்களும் காணாமல் போயுள்ளனர்!! -கூறுகிறார் கோட்டா-
யுத்தத்தின் போது இராணுவத் தளபதிகள் மற்றும் சிப்பாய்களும் காணாமல் போயுள்ளனர் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்று வரும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.