Sat. May 11th, 2024

யா/பிளவத்தை அ.மி.த.க.பாடசாலை நுழைவாயில் திறப்பு விழா

யா/பிளவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமைக்கப்பட்ட நுழைவாயில் திறப்புவிழா நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
பாடசாலையின் முதல்வர் மாணிக்கம் முருகதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலய திட்டமிடலுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.லாவண்யா சுகந்தன் அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக பாடசாலையின் பழைய மாணவரும் நலன்விரும்பியுமான இராமநாதன் செந்தில்குமரன் அவர்களும் அவரது பாரியார் திருமதி.சுமதி செந்தில்குமரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். நுழைவாயிலினை பிரதம விருந்தினர் திருமதி.லாவண்யா சுகந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர் இராமநாதன் செந்தில்குமரன் அவர்களும் திறந்து வைத்ததோடு பெயர்ப்பலகைகளை பாடசாலையின் அதிபர் திரு.மாணிக்கம் முருகதாசன் அவர்களும் சிறப்பு விருந்தினர் திருமதி.சுமதி செந்தில்குமரன் அவர்களும் திரைநீக்கம் செய்து வைத்தனர்.
குறித்த நுழைவாயிலானது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு.இராமநாதன் செந்தில்குமரன் அவர்கள் அவரது தந்தையாரும் பாடசாலையின் பழைய மாணவருமாகிய  அமரர் கிருஷ்ணர் இராமநாதன் அவர்களின் நினைவாக அவரது சொந்த நிதியில்,
பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பு (சர்வதேச உறவுகள்) ஊடாக அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த நிகழ்வில் அயற் பாடசாலைகளின் அதிபர்கள், வெளிநாடுகளில் வதியும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்