Fri. May 10th, 2024

மைக்கல் நேசக்கரம் அமைப்பின் 4ம் ஆண்டு நிறைவு விழா

மைக்கல் நேசக்கரம் அமைப்பின் 4ம் ஆண்டு நிறைவு விழா நாளை  (1.5.2022) காலை10 மணியளவில் மாலைசந்தை ஸ்ரீவரதராஜ விநாயகர்  ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மைக்கல் விளையாட்டு கழகத்தின்  தலைவர் த.வேணுகாணன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் யாழ் தினக்குரல் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஆ.சபேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் செல்வி ஜனனி சிவப்பிரகாசம், கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின்  ஓய்வு நிலை அதிபர் வே.சிவசிதம்பரம்,  பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர் திருமதி. கி.கலைவதனி, பருத்தித்துறை நீதிமன்ற வழக்குத் தொடுநர் ஆர்.புஸ்பகாந்தன், மாலை சந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகர்  ஆலய தலைவர் எஸ்.சிறிசண்முகதேவ் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள், உதவித் திட்டங்கள், நிவாரணங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்