அல்வாய் மனோகராவில் தொழிலாளர்கள் கெளரவிப்பு
அல்வாய் சன சமூக நிலையத்தினரால் தமது அங்கத்துவ தொழிலாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அல்வாய் மனோகரா முன்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அல்வாய் மனோகரா சன சமூக நிலையத்தின் தலைவர் செல்லத்தம்பி சுபேந்திரா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக ஓய்வுநிலை சுங்க பிரதிப் பணிப்பாளர் தங்கராசா யோகலிங்கம், சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை மக்கள் வங்கி முகாமையாளர் சச்சிதானந்தம் ஸ்ரீதரன் ஆசியுரைகளை அல்வாய் சாமணந்தறை பிள்ளையார் ஆலய நித்திய அர்ச்சகர் சிவஸ்ரீ.இரத்தினேஸ்வர ஐயா (குகன் ஐயா), தேவரையாளி இந்துக் கல்லூரி அதிபரும், அல்வாய் சாமணந்தறை பிள்ளையார் ஆலய தலைவருமான ச.செல்வானந்தன் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர்.