Thu. May 9th, 2024

முடக்கப்பட்ட மகா கச்சகொடி கிராமத்தில் 21 குடும்பங்கள் விடுவிப்பு

வவுனியா, மகா கச்சகொடி கிராமத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 21 குடும்பங்கள் இன்றைய தினம் சுகாதார திணைக்களத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியா, மகா கச்சகொடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், அண்மையில் விடுமுறைக்காக வருகை தந்திருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, குறித்த கடற்படை வீரரின் மகா கச்சகொடி கிராமம் தொடர்ந்தும் முடக்கப்பட்டது
இந்த நிலையில், மகா கச்சகொடி பகுதியில் கடற்படை வீரருடன் தொடர்பினை வைத்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ. சீ.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த 21 குடும்பங்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த கடற்படை வீரருடன் தொடர்பை பேணியதாக பம்பைமடுவில் தங்கவைக்கப்பட்டுள்ள 9 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளும் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, அவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மகா கச்சகொடி கிராமம் தவிர குறித்த கடற்படை வீரர் சென்ற வர்த்தக நிலையங்கள், காப்புறுதி நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் என்பவற்றைச் சேர்ந்த 115 பேர் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்