Wed. May 15th, 2024

கோப்பாயில் 45 லீற்றர் கசிப்பு, 150 லீற்றர் கோடா கைப்பற்றல்

கோப்பாய், குப்பிளாவத்தையில் சட்டத்துக்குப் புறம்பாக கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் ஒன்று பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கசிப்பு உற்பத்தி பொருட்கள் (1/5) கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அங்கு 45 லீற்றர் கசிப்பு, 150 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டன என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய், சாவகச்சேரி, வட்டுக்கோட்டை மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி பெரியளவில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்